Friday, July 22, 2011

முற்றுப் பெற்ற காமம், முடிவில் வேண்டிய வரம்!!!

எவரும் காணா இன்பம் கண்டேன்
உன்னை முழுதாய் ஆண்ட கர்வம் கொண்டேன்
முழுதாய் கலந்தாலும்
முற்றும் துறந்த கோலம் கண்டாலும்
காணாத உன் இளமை பருவ நிகழ்வை
வரமாய் வேண்டும் ஏக்கம் கொண்டேன்!

உன் மழலை சத்தம் - உன்
எச்சில் முத்தம் - நீ
முற்றத்தில் தவழ்ந்த நேரம் - உன்
தந்தையாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

தொட்டில் உலகிலும்
தோள்பட்டை சாய்விலும் - நீ
சிரித்த நேரம்
பூரித்த - உன்
தாயாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

மண்டியிட்டு நீ
மண்ணை உண்ட கணம்
சுட்டு விரல் நுழைத்து
மண் எடுத்த - உன்
அண்ணனாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

இடை அமர்ந்த தருணம்
விரல் பிடித்து நடந்த தருணம்
ஜடை பின்னல் சண்டையிட்ட தருணம்
பெண் ரகசியம் சுமந்த - உன்
சகோதரியாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

பள்ளி சென்ற காலம்- நீ
கிள்ளி தந்த பண்டம்,
அள்ளித் தின்ற உன் தோழி
அவளாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

காமம் கலைந்து
காதல் நிரம்பி
கண்ணில் வழிந்த நேரம்
வேண்டிய வரம்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment