நீ புத்தகம் வாசிக்கும்போதெல்லாம்
பக்கத்திற்கொரு முறை
இதழ் வருடி
நா தொடுகிறது உன் விரல் நுனி.
விரலாய் முடியாவிடினும்
பக்கங்களின் ஓரமாய்
பிறந்திருக்கக் கூடாதாயென
ஏங்குகிறதென் இதயம்!!!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்
No comments:
Post a Comment