Thursday, March 29, 2012

இப்படிக்கு உன் இரக்கமற்ற நினைவுகள்!!!


விடிந்தும் விடியாத காலை
கலைந்தும் கலையாத உறக்கம்
மறந்தும் மறையாத நினைவின் தடங்கள்

அன்றொரு நாள்
கொட்டிய மழையில்
ஒட்டியவாறு
ஒற்றை குடையில் இருவருமாய்!
நீரில் கால் பதித்து நடக்க
நிலவில் நடந்ததாய் ஞாபகம்!

அன்றொரு நாள்
கலைந்த படுக்கைக்குள்
கலையாத உறக்கத்தை
கலைத்துக்கொண்டு நுழைந்தது.
உன் விருப்பப்பாடல்
அன்றெல்லாம் உன் நினைவு
அனலாய் என்னுள்
கொதித்துக்கொண்டிருந்தது!

அன்றொரு நாள்
நாம் சென்ற பாதைகளில்
நான் மட்டும் தனியே.
நான் சென்ற பொழுது
நாம் பதித்த தடங்களை
ஒற்றையாய் தேடி அலைந்தேன்!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment