Tuesday, September 6, 2011

இனியொரு உலகு செய்வோம்!!!

தனி உலகம் வேண்டும்!!!
தண்ணீர் அங்கே
பொதுவாய் வேண்டும்!
சாதிப் போரில்
சாதிகள் மட்டும்
சாகட்டும்!
மனிதம் ஒன்றே
மதம் என்றாகட்டும்!
பசித்தவன் உணவு
கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கட்டும்!
கொட்டும் மழையும்
கொளுத்தும் வெய்யிலும்
வேண்டுவோர் தலையில்
மட்டும் விழட்டும்!
துர் மரணங்கள்
தூர விலகட்டும்!
மூப்பொன்றே மூச்சடக்கும்
காரணி ஆகட்டும்!
உழைப்பவனுக்கும்
உழைத்துக் களைத்தவனுக்குமே
ஊர் சொந்தமாகட்டும்!
கண்ணீர் ஊர்வலக்
காரண ஆயுதங்கள்
அமைதி ஊர்வலம்
போகட்டும்!

கடைசியில்,
குருதியின் ஓட்டம்
மனிதன் உடலுக்குள்
மட்டும் இருக்கட்டும்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment