Tuesday, September 20, 2011

சிதறல்கள்

கூந்தல் !
சரிந்து விழும்
கற்றை கூந்தல்
அதை
ஒதுக்கி விடும்
ஒற்றை விரல்
அந்த ஒன்றாய்
நானிருக்கக் கூடாதா?

பூச்சூடல்!
ரோஜாவின் சிகரத்தில்
மல்லிகை!
நீ
பூச்சூடிய அழகு!

பொட்டு!
நிறம் மாறும் நிலா
உன்
நெற்றிப் பொட்டில்
குடியிருக்கும்
பொட்டு

இதழ்!
உன் செவ்விதழ் தழுவி
வருவதால்தான்
செம்மொழியாயிற்றோ
என் மொழி?

கண்கள் !
கண்ணசைவில் நீ
கதை நூறு பேசுவதாய்
நண்பன் சொன்னான்
எனக்கென்னவோ
நிற்கும் ரயிலை
கடக்கும் ரயில்
மோதுவதை போலத்தான்
இருக்கிறது
உன் மேலிமை கீழிமையுடன்
கூடும்போது!

நாசி !
ஆக்ஸிஜன் நுகர்ந்து
ஆக்ஸிஜன் வெளியிடும்
அதிசய நாசி உனதோ ?
உன் மூச்சுக் காற்றில்
வாழ்கிறதே என் உயிர்!

பருவப் பரு !
ஆணவத்துடன் அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பரு
உன் கன்னம் வேண்டுமானால்
தாங்கிக் கொள்ளலாம்
என்னால் முடியாது

கழுத்து !
காதலையும் காமத்தையும்
இணைக்கும் பாலம்தான்
உன் மெழுகு கழுத்தோ?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment