Tuesday, October 18, 2011

உறவும் முறையும்

திருமண நிகழ்வொன்றில்
இவங்களை தெரியலையா? என்று
உறவுமுறையை
விளக்கத் தொடங்கினால் அம்மா.
ஒன்றுவிட்ட என்று தொடங்கி
அவங்களோட இவங்களோட
என்று இடையிடையே
தெரிந்த தெரியாத உறவுகளையும்
உள் நுழைத்து
ஒரு வழியாய் முடிப்பதற்குள்
முன்னூறு நொடிகளை
முழுங்கியிருந்தாள்.
கடைசிவரை சொல்லவே இல்லை
எப்படி அழைப்பது என்றோ
என்ன முறை என்றோ.
அத்தை என்றழைக்கலாமா?
அக்கா என்றழைக்கலாமா?
பெண் இருந்தால் என்ற பேராசை
மட்டும் குத்தாட்டம் போட்டது.
எதற்கும் இருக்கட்டும் என்று
நல்லாயிருக்கிங்களா என்று வெறுமனே
கேட்டு வைத்தேன்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment