Thursday, October 27, 2011

முயற்சி கொள், முடிவில் வெல்!!!

தொடுக்கப்பட்ட அம்பெல்லாம்
இலக்கை கொய்வதில்லை,
விடுக்கப்பட்ட கேள்விக்கெல்லாம்
விடை கிடைப்பதுமில்லை.
தொடுப்பதும் விடுப்பதும்
முடிவாக அல்ல
முயற்சியாக!

பூத்த பூ
பூமி சுற்றும் வரை
வாழ்வதில்லை.
பூ உதிர்ந்தால்
பூ சுமக்கும் செடி
மரிப்பதில்லை.
பூ பூப்பது
மடிவதற்காக அல்ல
மணப்பதற்காக!

கட்டும்போது
தாங்கும் மலரே
மாலையாகிறது.
வெட்டுப்பட
ஏங்கும் மரமே
வாசல் நிலையாகிறது.

வலியில்லா வாழ்க்கை
வளம் பெறுமா?
வலியில்லா வாழ்வுதான்
வலி பெறுமா?

தோல்வியின் விளிம்பில்தான்
வெற்றியின் வேர்கள்
தொடங்குகின்றன.
தோல்வியில் மிரண்டால்
வெற்றியின் விதைகள்
வேர் விடுவதில்லை.

வெட்ட வெட்ட நீள்வோம்...
தோல்வி தோற்கும் வரை
வெற்றி கிட்டும் வரை!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment