Tuesday, March 27, 2012

மதுக் கோப்பையும் மயக்கப் புன்னகையும்!!!


கிறக்கம் கொண்டும்
உறக்கம் இல்லை.
மதுக் கோப்பையும்
மயக்கப் புன்னகையும்
தருகிறது கிறக்கம்.
கீழ்காண்பவை பறிக்கிறதென் உறக்கம்.
இரக்கமில்லாத இதழ்,
உறக்கம் பறித்த விழி,
கரும் பனிப்புயல் கூந்தல்
பனிக்கட்டி பற்கள்
உடை தூங்கும் இடை
கொன்று புதைக்கும் கன்னக்குழி
ரேகை சுமக்கும் உள்ளங்கை
அதை இணைக்கும் முன்னங்கை
நிலத்தில் முளைத்த புற்களாய்
பரந்து கிடக்கும் ரோமங்கள்
அங்கங்கெளெல்லாம் தீக்கங்குகளாய்
எரித்து தொலைக்கிறது என்னை
ஏனோ வலியில்லை
சுகமுமில்லை
சுமை கூட இல்லை
இமை மூட மட்டும்
இதுவரை வழியில்லை....

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment