திரைச் சீலையில்
மறைந்து கொண்ட நான்,
தேடிக் கண்டுபிடித்த மழலை,
அந்த ஒரு நிமிடம்
நான்
தொலைந்துதான் போயிருந்தேன்!.
என் பாதிப்புகளை இங்கே பதிவுகளாய் பதிப்பித்திருக்கிறேன்.கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாண்டி, நிமிடங்களில் தோன்றும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சேகரித்து வைக்கும் இணையகலனாகவே என் வலைதளம்..............
திரைச் சீலையில்
மறைந்து கொண்ட நான்,
தேடிக் கண்டுபிடித்த மழலை,
அந்த ஒரு நிமிடம்
நான்
தொலைந்துதான் போயிருந்தேன்!.
குடை விரிந்ததும்
சிரித்துக் கொண்டே பிறக்கிறேன்
சற்று நேரத்திலெல்லாம் நடக்கிறேன்.
அந்த நாள்
என் வலக்கை
இடப்பக்கமாக இருந்த ஞாபகம்!
நள்ளிரவு மழை
இரட்டை வானவில்
ஒற்றை நிறத்தில் !
சிரித்துக் கொண்டே செல்லும் சிற்பம்
முறைத்துக்கொண்டே மூச்சு விடும் சித்திரம்
தெளிந்த குட்டையில்
குழம்பிய மீன்கள்
மனிதர்களுக்கு வலை வீசுகின்றன !
ஆண்களில்லா தேசத்தின் வீதியில்
பெண்ணொருத்தி
குழந்தை தூக்கி என்னை கடக்கிறாள் !
நடந்து முடிக்கையில்
நனைந்தும் முடித்திருக்கிறேன்
வெள்ளை புரவி வேட்டைக்குச் செல்ல
நான் தேரிழுக்கிறேன். - அங்கே
புலியொன்று புல் மேய
மானொன்று அதன் மேல் பாய
அருகே
களிறொன்று கயிறோன்றால் தூக்கிலிடப்படுகிறது!
வேட்டை முடிந்து புரவி மன்னன்
கோட்டை திரும்புகிறான்
கோட்டையில்,
கருத்த கிழவி வெளுத்த உடையில்
தன் மகனை கொன்ற
புரவி மகனுக்கெதிறாய் மணியடிக்கிறாள்
தேர்க்காலில் இடப்பட்ட
புரவி மகனின் தண்டனையை நிறைவேற்ற
நானே தேரிழுக்கிறேன்
கூரான பூ ஒன்று
என்னை குத்திக் கிழிக்கிறது
தண்டித்ததன் தண்டனையாய்
வாரத்தின் எட்டாவது நாள்
செத்து விழுகிறேன்
நட்டநடு இரவில்
சட்டென்று கண் விழிக்கிறேன்
கலைந்து போனது
எட்டு நாள் வாழ்க்கை!
கூந்தல் !
சரிந்து விழும்
கற்றை கூந்தல்
அதை
ஒதுக்கி விடும்
ஒற்றை விரல்
அந்த ஒன்றாய்
நானிருக்கக் கூடாதா?
பூச்சூடல்!
ரோஜாவின் சிகரத்தில்
மல்லிகை!
நீ
பூச்சூடிய அழகு!
பொட்டு!
நிறம் மாறும் நிலா
உன்
நெற்றிப் பொட்டில்
குடியிருக்கும்
பொட்டு
இதழ்!
உன் செவ்விதழ் தழுவி
வருவதால்தான்
செம்மொழியாயிற்றோ
என் மொழி?
கண்கள் !
கண்ணசைவில் நீ
கதை நூறு பேசுவதாய்
நண்பன் சொன்னான்
எனக்கென்னவோ
நிற்கும் ரயிலை
கடக்கும் ரயில்
மோதுவதை போலத்தான்
இருக்கிறது
உன் மேலிமை கீழிமையுடன்
கூடும்போது!
நாசி !
ஆக்ஸிஜன் நுகர்ந்து
ஆக்ஸிஜன் வெளியிடும்
அதிசய நாசி உனதோ ?
உன் மூச்சுக் காற்றில்
வாழ்கிறதே என் உயிர்!
பருவப் பரு !
ஆணவத்துடன் அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பரு
உன் கன்னம் வேண்டுமானால்
தாங்கிக் கொள்ளலாம்
என்னால் முடியாது
கழுத்து !
காதலையும் காமத்தையும்
இணைக்கும் பாலம்தான்
உன் மெழுகு கழுத்தோ?