என் பாதிப்புகளை இங்கே பதிவுகளாய் பதிப்பித்திருக்கிறேன்.கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாண்டி, நிமிடங்களில் தோன்றும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சேகரித்து வைக்கும் இணையகலனாகவே என் வலைதளம்..............
Thursday, November 3, 2011
நீர்த்துளி!!!
Thursday, October 27, 2011
முயற்சி கொள், முடிவில் வெல்!!!
இலக்கை கொய்வதில்லை,
விடுக்கப்பட்ட கேள்விக்கெல்லாம்
விடை கிடைப்பதுமில்லை.
தொடுப்பதும் விடுப்பதும்
முடிவாக அல்ல
முயற்சியாக!
பூத்த பூ
பூமி சுற்றும் வரை
வாழ்வதில்லை.
பூ உதிர்ந்தால்
பூ சுமக்கும் செடி
மரிப்பதில்லை.
பூ பூப்பது
மடிவதற்காக அல்ல
மணப்பதற்காக!
கட்டும்போது
தாங்கும் மலரே
மாலையாகிறது.
வெட்டுப்பட
ஏங்கும் மரமே
வாசல் நிலையாகிறது.
வலியில்லா வாழ்க்கை
வளம் பெறுமா?
வலியில்லா வாழ்வுதான்
வலி பெறுமா?
தோல்வியின் விளிம்பில்தான்
வெற்றியின் வேர்கள்
தொடங்குகின்றன.
தோல்வியில் மிரண்டால்
வெற்றியின் விதைகள்
வேர் விடுவதில்லை.
வெட்ட வெட்ட நீள்வோம்...
தோல்வி தோற்கும் வரை
வெற்றி கிட்டும் வரை!!!
Wednesday, October 19, 2011
என் கவிதை வரும் நேரம்
Tuesday, October 18, 2011
உறவும் முறையும்
Thursday, October 6, 2011
நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!
திரைச் சீலையில்
மறைந்து கொண்ட நான்,
தேடிக் கண்டுபிடித்த மழலை,
அந்த ஒரு நிமிடம்
நான்
தொலைந்துதான் போயிருந்தேன்!.
Sunday, October 2, 2011
குடைக்குள் நிலவு!
குடை விரிந்ததும்
வானம் மறைந்தது
நிலவு மறையவில்லை.
குடைக்குள் நிலவு!
Tuesday, September 27, 2011
எட்டு நாள் வாழ்க்கை !!!
சிரித்துக் கொண்டே பிறக்கிறேன்
சற்று நேரத்திலெல்லாம் நடக்கிறேன்.
அந்த நாள்
என் வலக்கை
இடப்பக்கமாக இருந்த ஞாபகம்!
நள்ளிரவு மழை
இரட்டை வானவில்
ஒற்றை நிறத்தில் !
சிரித்துக் கொண்டே செல்லும் சிற்பம்
முறைத்துக்கொண்டே மூச்சு விடும் சித்திரம்
தெளிந்த குட்டையில்
குழம்பிய மீன்கள்
மனிதர்களுக்கு வலை வீசுகின்றன !
ஆண்களில்லா தேசத்தின் வீதியில்
பெண்ணொருத்தி
குழந்தை தூக்கி என்னை கடக்கிறாள் !
நடந்து முடிக்கையில்
நனைந்தும் முடித்திருக்கிறேன்
வெள்ளை புரவி வேட்டைக்குச் செல்ல
நான் தேரிழுக்கிறேன். - அங்கே
புலியொன்று புல் மேய
மானொன்று அதன் மேல் பாய
அருகே
களிறொன்று கயிறோன்றால் தூக்கிலிடப்படுகிறது!
வேட்டை முடிந்து புரவி மன்னன்
கோட்டை திரும்புகிறான்
கோட்டையில்,
கருத்த கிழவி வெளுத்த உடையில்
தன் மகனை கொன்ற
புரவி மகனுக்கெதிறாய் மணியடிக்கிறாள்
தேர்க்காலில் இடப்பட்ட
புரவி மகனின் தண்டனையை நிறைவேற்ற
நானே தேரிழுக்கிறேன்
கூரான பூ ஒன்று
என்னை குத்திக் கிழிக்கிறது
தண்டித்ததன் தண்டனையாய்
வாரத்தின் எட்டாவது நாள்
செத்து விழுகிறேன்
நட்டநடு இரவில்
சட்டென்று கண் விழிக்கிறேன்
கலைந்து போனது
எட்டு நாள் வாழ்க்கை!